Home காணொளி யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்

by Dr.K.Subashini
0 comment

கூத்துக்கலையை வளர்க்கும் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல் [28.10.2018]:

 

கலைவழி மனிதத்தை வளர்த்தல் என்ற நோக்கில் 1965 ஆம் ஆண்டு அருட்தந்தை மரியசேவியர் அவர்களால் யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம் துவக்கப்பட்டது, தொடர்ந்து கவின்கலை பயிலகம் என்று பல நுண்கலை வளர்க்கும் பணியை மேற்கொண்டது. திருமறை கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வழியாக கூத்துக்கலையை சிறப்பாக வளர்த்துவருகிறது இக்கவின்கலை நிறுவனம்.

 

இந்த அமைப்பு போர்க்காலத்தில் சமாதான நோக்குடன் செயல்பட்டது, இலங்கையின் பல்வேறு இனமக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. அமைதிப் பணியை கலைமூலம் தொடர்ந்து பல்லாண்டுகளாகச் செய்து வரும் பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் சீரிய பணியைப் பாராட்டி மாண்புமிகு இலங்கை ஜனாதிபதி அவர்கள், அமைதிக்கான ஜனாதிபதி விருதினை 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு அளித்துக் கௌரவித்தார்.

 

நிறுவனர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுடனும், அவரோடு இன்று இணைந்து செயல்படும் இளம் ஆய்வாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கூத்துக் கலைஞர்களுடன் ஒரு கலந்துரையாடல். போர்க்காலத்திலும் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் திருமறை கலாமன்றம் செயல்படுத்தியமை குறித்து விரிவாக இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படுகிறது. சில பாடல்களும் பாடப்படுகின்றன.

 

இந்த மண்ணின்குரல் மரபுக்காணொளி பதிவிற்கு உதவிய பன்மொழிப் புலவர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் திருமறை கலாமன்றம்-கலைத்தூது அழகியல் கல்லூரி கலைஞர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

 

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment